/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரூப் - 2, 2ஏ முதன்மை தேர்வு 17ல் இலவச பயிற்சி துவக்கம்
/
குரூப் - 2, 2ஏ முதன்மை தேர்வு 17ல் இலவச பயிற்சி துவக்கம்
குரூப் - 2, 2ஏ முதன்மை தேர்வு 17ல் இலவச பயிற்சி துவக்கம்
குரூப் - 2, 2ஏ முதன்மை தேர்வு 17ல் இலவச பயிற்சி துவக்கம்
ADDED : நவ 14, 2025 12:14 AM
திருப்பூர்: குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 17ம் தேதி துவங்குகின்றன.
இதுகுறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை - 2, முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர் என மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. கடந்த செப். 28 ல், முதல் நிலை தேர்வுகள் நடைபெற்றதையடுத்து, முதன்மை தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும்,மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வுக்கான வகுப்புகள், அறை எண்: 439ல், வரும் 17 ம் தேதி முதல் துவங்குகின்றன. இப்பயிற்சியின்போது, மாதம் இருமுறை மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும். இலவசமாக அளிக்கப்படும் இப்பயிற்சியில் சேர விரும்புவோர், 0421 - 2999152, 94990 - 55944 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

