sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவன்மலை முருகன் கோயிலில் கந்தர் சஷ்டி விழா ஆரம்பம்; பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினார்

/

சிவன்மலை முருகன் கோயிலில் கந்தர் சஷ்டி விழா ஆரம்பம்; பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினார்

சிவன்மலை முருகன் கோயிலில் கந்தர் சஷ்டி விழா ஆரம்பம்; பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினார்

சிவன்மலை முருகன் கோயிலில் கந்தர் சஷ்டி விழா ஆரம்பம்; பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினார்


ADDED : நவ 02, 2024 03:10 PM

Google News

ADDED : நவ 02, 2024 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து காப்பு அணிந்து விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.

காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. ஒரு வார காலம் நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 1:40 மணிக்கு சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்து மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சாமி கோவிலுக்கு சென்றார். இதில் தினமும் காலை மணி 10:30 மற்றும் மாலை 4:00 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெரும். 7ம் தேதி சூரசம்ஹாரா விழா மாலை 5:00 மணிக்கும், 8ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், நவ.9ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவமும் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us