sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குப்பை லாரி சிறைவைப்பு

/

 குப்பை லாரி சிறைவைப்பு

 குப்பை லாரி சிறைவைப்பு

 குப்பை லாரி சிறைவைப்பு


ADDED : டிச 29, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாநல்லூர்: திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, பாலாஜி நகர் குட்டை தோட்டம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு பயனற்ற தரைமட்ட பெரிய கிணறு ஒன்று உள்ளது. கிணற்றில் இருவர் தவறி விழுந்து இறந்துள்ளனர்.

அப்பகுதியினர் சிலர் கிணறு பாதுகாப்பற்ற முறையிலும், பயனற்ற நிலையிலும் உள்ளதால், குப்பையோ, மண்ணோ போட்டு கிணற்றை மூடி தரும்படி திருப்பூர் மேயரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கிணற்றில் குப்பை கொட்டும் பணியை மேற்கொண்டனர்.

இதையறிந்த அப்பகுதியினர் குப்பை கொட்டினால் துர்நாற்றம் வீசும்; குடியிருக்க முடியாது; நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி,குப்பை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை திருப்பி எடுத்து சென்றனர். அங்கு வந்த எம்.எல்.ஏ. விஜயகுமாரிடம், பொதுமக்கள், கிணற்றை மண் போட்டு மூடி தரும்படி கூறினர். அதற்கு அவர் மூடி தருவதாக உறுதி கூறினார்.






      Dinamalar
      Follow us