ADDED : செப் 20, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றிய அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு ஊழியர் சங்க பல்லடம் வட்டார செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சத்துணவு ஊழியர் சங்க வட்டார தலைவர் ஜானகி, செயலாளர் சுசீலா, பொருளாளர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.