sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காவலர் சிறுவர் - சிறுமியர் மன்றம் திறப்பு

/

காவலர் சிறுவர் - சிறுமியர் மன்றம் திறப்பு

காவலர் சிறுவர் - சிறுமியர் மன்றம் திறப்பு

காவலர் சிறுவர் - சிறுமியர் மன்றம் திறப்பு


ADDED : பிப் 20, 2025 11:57 PM

Google News

ADDED : பிப் 20, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம் மற்றும் 15 வேலம்பாளையம் போலீசார் சார்பில், காவலர் சிறுவர் - சிறுமியர் மன்றம் திறப்பு விழா ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது.

ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா திறந்து வைத்தார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், காந்தி நகர் ரோட்டரி சங்க தலைவர் உமாகாந்த், செயலாளர் மணிமாறன், பொருளாளர் ஆனந்த் குமார், திட்ட தலைவர் செந்தில் குமார், கவுன்சிலர் பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போலீசார் கேட்டு கொண்டதன் பேரில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்களிப்பில் நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பள்ளி செல்லா சிறுவர், சிறுமிகளுக்கு படிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறுதல், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதனை தடுக்கும் பொருட்டு மன ரீதியான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவை இங்கு மேற்கொள்ளப்படும்.






      Dinamalar
      Follow us