sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துங்காவி ரோட்டில் மரக்கன்று நடவு நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு

/

துங்காவி ரோட்டில் மரக்கன்று நடவு நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு

துங்காவி ரோட்டில் மரக்கன்று நடவு நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு

துங்காவி ரோட்டில் மரக்கன்று நடவு நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு


ADDED : ஜன 06, 2025 01:05 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; பருவமழைக்குப்பிறகு, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், ரோட்டோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை ஒரு பகுதி, மாவட்ட முக்கிய ரோடு உள்ளிட்ட ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ரோடுகளில், பருவமழைக்கு பிறகு ரோட்டோரத்தில், வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறாக இருந்த, புதர் அகற்றப்பட்டது. தற்போது, ரோட்டோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட இதர சாலை பிரிவில் பராமரிக்கப்படும், துங்காவி - மடத்துக்குளம் ரோட்டில், புங்கன், அரச மரம், பாதானி, நாவல் பழம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.

மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், பசுமை வலையும் அமைக்கப்பட்டு வருகிறது. உட்கோட்டத்திலுள்ள அனைத்து ரோடுகளிலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us