sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாருங்கள் ஹிந்து முன்னணி அழைப்பு

/

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாருங்கள் ஹிந்து முன்னணி அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாருங்கள் ஹிந்து முன்னணி அழைப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாருங்கள் ஹிந்து முன்னணி அழைப்பு


ADDED : அக் 31, 2025 03:38 AM

Google News

ADDED : அக் 31, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வருமாறு, ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:

கார்த்திகை தீபத்திருவிழா தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க விழா. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோயில் முன் புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.

மலை மீதுள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, ஹிந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்திய சட்டப் போராட்டம் இதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், தீர்ப்பு வந்து பல ஆண்டுகளாகியும் கோயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வழிபாடு நம் உரிமை; நீதிமன்ற மும் சட்டப்படி அதை உறுதி செய்துள்ளது. தீபத் துாணில் தீபம் ஏற்றுவதை கோயில் நிர்வாகம் பின் பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இதை மாற்றும் வகை யில், வரும் திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங் குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றி வழிபட, முருக பக்தர்கள், அடியார்கள், ஆன்மிக குழுவினர், பாத யாத்திரை, காவடி குழுவினர் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us