sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நல்ல மீன் எப்படி பார்த்து வாங்குவது? உணவு பாதுகாப்பு துறையின் 'ஐடியா'

/

நல்ல மீன் எப்படி பார்த்து வாங்குவது? உணவு பாதுகாப்பு துறையின் 'ஐடியா'

நல்ல மீன் எப்படி பார்த்து வாங்குவது? உணவு பாதுகாப்பு துறையின் 'ஐடியா'

நல்ல மீன் எப்படி பார்த்து வாங்குவது? உணவு பாதுகாப்பு துறையின் 'ஐடியா'


ADDED : ஜன 19, 2024 04:30 AM

Google News

ADDED : ஜன 19, 2024 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : நல்ல மீன்களை எப்படி பார்த்து வாங்குவது குறித்து, பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

திருப்பூர், தென்னம்பாளையத்திலுள்ள மீன் மார்க்கெட்டில், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அலுவலர்கள் தங்கவேல், பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி, மீன்வள ஆய்வாளர் ரெஜினா ஆகியோர் நேற்று காலை ஆய்வு நடத்தினர்.

மொத்தமுள்ள 30 கடைகளிலும், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மீன்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கெட்டுப்போன இரண்டு கிலோ மீன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

மீன் விற்பனையாளர்கள், விற்பனை செய்யும் இடத்தை துாய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கவேண்டும். இருப்பு வைக்கப்படும் மீன்களை சரியான வெப்பநிலையில் பராமரிக்கவேண்டும். முதலில் கொண்டுவரப்படும் மீன்களை, முதலில் விற்பனை செய்யும் முறையை கடைபிடிக்கவேண்டும். உணவு பாதுகாப்புத்துறை வழங்கிய உரிமத்தை, கடைகளில் காட்சிப்படுத்தவேண்டும்.

கெட்டுப்போன, பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது. மீன் கொள்முதலுக்கான ரசீதுகளை முறையாக பராமரிக்க வேண்டும். மீன் இருப்பு வைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மீன் வாங்கும் பொதுமக்கள், மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். மீன்களில் மையப்பகுதியில் லேசாக அழுத்தும்போது, அந்த பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us