sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 போலி டாக்டர்கள் மீது உடனடி நடவடிக்கை

/

 போலி டாக்டர்கள் மீது உடனடி நடவடிக்கை

 போலி டாக்டர்கள் மீது உடனடி நடவடிக்கை

 போலி டாக்டர்கள் மீது உடனடி நடவடிக்கை


ADDED : டிச 05, 2025 08:31 AM

Google News

ADDED : டிச 05, 2025 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கடந்த நவ. மாதம் மாவட்ட மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், குண்டடம், முத்தையன் பட்டியில், போலி டாக்டர், அவரது மனைவி இருவரும் சிக்கினார். மருந்துக்கடை நடத்த அங்கீகாரம் வாங்கி விட்டு, வீட்டுக்குள்ளே மருத்துவமனை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. வெள்ளகோவில், தசவநாயக்கன் பட்டியில், 75 வயது முதியவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு, மருத்துவம் பார்த்து வந்தார். போலி டாக்டரான இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரு மாதத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இரண்டு போலி டாக்டர்கள் மாவட்டத்தில் சிக்கியுள்ளனர். இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறியும் பணியை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

மருத்துவ நிறுவனங்கள் www.tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேகம் இருப்பின் போலி டாக்டர்கள் குறித்து, tncea.dmrhs@gmail.com என்ற இமெயில் முகவரி அல்லது 104 என்று அரசின் இலவச தொடர்பு எண் மூலமாக பொதுமக்கள், நோயாளிகள் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவு செய்வது அவசியம் மருத்துவ நிறுவனங்களை பதிவு செய்யவும், அவற்றின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும், மருத்துவ நிறுவனங்கள் திருத்த சட்டத்தின் கீழ் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது; மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், நோயறிதல் மையங்கள் போன்றவை பதிவு செய்யப்படுவது அவசியம். - மருத்துவப்பணிகள் இயக்கக அதிகாரிகள்.








      Dinamalar
      Follow us