sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கால்வாய் பாதையை மேம்படுத்துங்க! மக்கள் வலியுறுத்தல்

/

கால்வாய் பாதையை மேம்படுத்துங்க! மக்கள் வலியுறுத்தல்

கால்வாய் பாதையை மேம்படுத்துங்க! மக்கள் வலியுறுத்தல்

கால்வாய் பாதையை மேம்படுத்துங்க! மக்கள் வலியுறுத்தல்


ADDED : அக் 15, 2025 11:47 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பல்வேறு கிராமங்களை நகருடன் இணைக்கும், பி.ஏ.பி., கால்வாய் கரையிலுள்ள, மண் பாதையை தார்ரோடாக மேம்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பி.ஏ.பி., பாசன திட்டத்தில், உடுமலை கால்வாயானது, திருமூர்த்தி அணையிலிருந்து துவங்கி, நகரை ஒட்டியுள்ள கிராமங்கள் வழியாக செல்கிறது.

இந்த கால்வாயில், கண்காணிப்பு உட்பட பணிகளுக்காக, பொதுப்பணித்துறை சார்பில், முன்பு பாதை பராமரிக்கப்பட்டு வந்தது. இப்பாதையை, அப்பகுதி விவசாயிகளும், சுற்றுப்பகுதி கிராம மக்களும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பள்ளபாளையத்தில் இருந்து போடிபட்டி எல்லை வழியாக, உடுமலை அரசு கலைக்கல்லுாரி வரை, இப்பாதையை நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாய விளைபொருட்களையும், இப்பாதை வழியாக நகர சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இவ்வாறு, அதிகளவு பயன்படுத்தப்படும் பாதை, பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.

இப்பாதையானது, அரசு கலைக்கல்லுாரி முதல் எஸ்.வி., புரம் வரை, தார்ரோடாக மேம்படுத்தப்பட்டு, பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதே போல், பள்ளபாளையத்திலிருந்து அரசு கல்லுாரி வரையிலான பாதையையும் மேம்படுத்த தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது. மேம்பாட்டு பணிகளை செய்தால், தெற்கு பகுதி கிராம மக்கள், நகருக்குள் வர, மாற்றுப்பாதையும் கிடைக்கும்.

நகருடன் பல கிராமங்களை இணைக்கும், இத்திட்டம் குறித்து பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஆய்வு நடத்தவும் அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us