/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரிந்த நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை
/
எரிந்த நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை
ADDED : பிப் 21, 2026 05:01 AM

திருப்பூர்: தாராபுரத்தில், எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டைமேடு தெரு, கல்லறை தோட்டம் முன்பு, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியின் பின்பகுதியில் உள்ள குறுகிய இடத்தில் பெண் சடலம் கிடந்தது தெரிந்தது.
தாராபுரம் டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அங்கு விசாரணை நடத்தினர். தலைப்பகுதி மற்றும் கால் பாதம் தவிர, உடல் முற்றிலும் எரிந்தநிலையில் காணப்பட்டது. இறந்தவர் அனுமந்தபுரத்தைச் சேர்ந்த காளியம்மாள், 80, என, தெரிந்தது. கணவர் கரிகாலன் இறந்த பின் தனியாக வசித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், விபத்தில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரை, அவரது மூன்று மகன்களும் பார்த்து சென்றுள்ளனர்.
அதன்பின், இந்த சம்பவம் நடந்துள்ளது. சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

