sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'உயர்வை தந்தது ஒழுக்கமே'

/

'உயர்வை தந்தது ஒழுக்கமே'

'உயர்வை தந்தது ஒழுக்கமே'

'உயர்வை தந்தது ஒழுக்கமே'


ADDED : மே 24, 2025 11:12 PM

Google News

ADDED : மே 24, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்றதால் தான், வாழ்வில் உயர்ந்து நிற்கிறோம்...'' என்பது தான், வாழ்க்கை பயணத்தில் நலமும், வளமும் பெற்றவர்களின் அனுபவம்.

அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2000 முதல், 2004 வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. 21 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள், பரஸ்பரம் நலம் விசாரிப்பிலும், பள்ளி நாட்களை நினைவு கூர்வதிலும் நேரத்தை கழித்தனர். காலை முதல் மாலை வரை, உற்சாகத்துடன் பொழுதை கழித்த அவர்கள், ''ஒழுக்கம், கல்வி என, இரண்டையும் இரு கண்களை போன்று, சரிசமமாக ஆசிரியர்கள் கற்று கொடுத்ததன் விளைவு தான், அன்று இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், இன்று நல்ல நிலையில் உள்ளனர்'' என, நெகிழ்ந்தனர்.

நடப்பு கல்வியாண்டில் இப்பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வெதிய மாணவ, மாணவியரில், 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஆனால், கடந்தாண்டு, 75 சதவீத தேர்ச்சி கிடைத்தது. இம்முறை தேர்வெழுதிய, 98 மாணவ, மாணவியரில், 36 பேர், 400க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த முன்னேற்றத்தை வெகுவாக பாராட்டிய முன்னாள் மாணவர்கள்,

'இன்று, மாலை நேர வகுப்புகளே சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அன்று இரவு நேர வகுப்புகள் கூட நடக்கும்; ஆர்வமுடன் படித்தோம். பெற்றோரும் தயக்கமின்றி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க கற்பித்தல் பணியும், மாணவர்களின் ஆர்வ துடிப்பும், கடந்த, 2002ம் ஆண்டிலேயே, 100 சதவீத தேர்ச்சியை பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்தது,' என முன்னாள் மாணவர்கள் பலரும் உண்மையை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவாக, பள்ளி தலைமையாசிரியர், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை பிரபாவதி, ஆசிரியர் பழனிசாமி உள்ளிட்ட தங்களுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறி பிரியாவிடை பெற்றனர்.






      Dinamalar
      Follow us