ADDED : நவ 05, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், கொங்கு நகரில், டூவீலரை திருடியது தொடர்பாக மங்கலத்தை சேர்ந்த சதாம் உசேன், 33 என்பவரை கடந்த, 2023ம் ஆண்டு திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் ஜே.எம்.எண்:2 கோர்ட்டில் நடந்தது. ஜாமீனில் வந்த சதாம் உசேன் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த, இரு நாட்களுக்கு முன் அவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணையில், சதாம் உசேனுக்கு, இரண்டு ஆண்ட சிறை தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் செந்தில்ராஜா உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவிதா ஆஜரானார்.

