sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காங்கயம் போலீஸ் ஸ்டேஷன்  4 ஆண்டு சொத்து வரி பாக்கி

/

காங்கயம் போலீஸ் ஸ்டேஷன்  4 ஆண்டு சொத்து வரி பாக்கி

காங்கயம் போலீஸ் ஸ்டேஷன்  4 ஆண்டு சொத்து வரி பாக்கி

காங்கயம் போலீஸ் ஸ்டேஷன்  4 ஆண்டு சொத்து வரி பாக்கி


ADDED : செப் 27, 2025 01:29 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் மீது, 4 ஆண்டு நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்துமாறு, நகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து, காங்கயம் நகராட்சி கமிஷனர் பால்ராஜ், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,க்கு அனுப்பிய கடித விவரம்:காங்கயம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள காங்கயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொத்துவரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 பிப்.,13 முதல் இக்கட்டடம் பயன்பாட்டில் உள்ளது.

புதிதாக சொத்துவரி வரிவிதிப்பு செய்யப்பட்ட கட்டடத்திற்கு 2022 - 23 முதல் அரையாண்டு முதல் 2025 -26ம் நிதியாண்டுக்கு இரண்டு அரையாண்டு சொத்துவரி செலுத்த வேண்டும்.அவ்வகையில், 2022 -23 ஆண்டில், 57,922 ரூபாய், 2023-24 ஆண்டு 57,922 ரூபாய், 2024-25 ஆண்டுக்கு 59,641 ரூபாய்.

இதுதவிர, 2025-26 ஆண்டுக்கு 61,360 ரூபாய் என சொத்து வரி மொத்தம், 2,36,845 ரூபாய் செலுத்த வேண்டும்.நிதியாண்டு துவங்கிய, 30 நாட்களுக்குள் இந்த வரி செலுத்தி, நகரின் வளர்ச்சிக்கு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us