/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மதுக்கடை மூடல்: கலெக்டர் அறிவிப்பு
/
நாளை மதுக்கடை மூடல்: கலெக்டர் அறிவிப்பு
ADDED : செப் 30, 2025 10:17 PM
உடுமலை:
காந்தி ஜெயந்தியையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் நாளை மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே கூறியிருப்பதாவது: நாளை (2ம் தேதி) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகள் செயல்படக்கூடாது.
மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் பார்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், காந்தி ஜெயந்தி நாள் முழுவதும் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்படவேண்டும்.
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.