நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: படியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முழு உடல் பரிசோதனை அறிக்கையை அமைச்சர் வழங்கினார். மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, மண்டல குழு தலைவர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

