sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழந்தைகள் பாதுகாப்புக்கு நகராட்சியில் குழு கூட்டம்

/

குழந்தைகள் பாதுகாப்புக்கு நகராட்சியில் குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்புக்கு நகராட்சியில் குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்புக்கு நகராட்சியில் குழு கூட்டம்


ADDED : செப் 28, 2025 11:43 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை நகராட்சி அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், நகராட்சி தலைவர் மத்தீன் தலைமையில் நடந்தது. குழந்தைகளின் பாதுகாப்பு குழு செயலாளர் மற்றும் நகராட்சி கமிஷனர் விநாயகம் முன்னிலை வகித்தார்.

இதில், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் தடுப்பு, குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தை பிறப்பு பதிவு, ஆதார் அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குழந்தைகளுக்கு காலம் தவறாது தடுப்பூசி போடுதல் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தல், பத்தாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்துதல், ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத கிராமங்களை உறுதி செய்தல் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன், குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் அர்ஜுனன், மஞ்சுளா, ஜெயந்தி, சமூக நலத்துறை அலுவலர் சரளா, தொழிலாளர் அமைப்பு உதவியாளர் ராஜமுருகன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், சிவக்குமார், செல்வகுமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us