sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்

/

பஸ் ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்

பஸ் ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்

பஸ் ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்


ADDED : ஜன 26, 2025 11:23 PM

Google News

ADDED : ஜன 26, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ;உடுமலை பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்துள்ள கடைகளால், பயணியர் பாதிக்கின்றனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, சுற்றுப்பகுதி கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட்டில், ஆக்கிரமிப்புகள் அபரிமிதமாக உயர்ந்துள்ளன. வணிக வளாகத்திலுள்ள கடைகள் விதி முறை மீறி, மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. பெரும்பாலான கடை உரிமையாளர்கள், ஒதுக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஆக்கிரமித்துள்ளதோடு, உள் வாடகைக்கும் கடைகளை விட்டுள்ளனர்.

பயணியர் காத்திருக்க அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், பஸ்கள் நிற்கும் ரேக்குகள் என நுாற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அவர்கள் நடந்து செல்ல முடியாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், பஸ்கள் வரும் வழித்தடம் உட்பட, பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும், ஏராளமான கடைகள் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. முறைகேடாக கடைகளுக்கு வாடகை நிர்ணயித்து வசூல் செய்து வருகின்றனர்.

இதனால், பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் விதிமுறை மீறிய கடைகளாக காட்சியளிக்கிறது. பஸ் ஸ்டாண்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us