/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு சீருடை தந்த 'மை இந்தியா - மை ஸ்கூல்'
/
விளையாட்டு சீருடை தந்த 'மை இந்தியா - மை ஸ்கூல்'
ADDED : அக் 25, 2025 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: 'மை இந்தியா - மை ஸ்கூல்' சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் கபடிப்போட்டியில் விளையாடவுள்ள தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 'மை இந்தியா - மை ஸ்கூல்' அமைப்பின் சார்பில் விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. 'மை இந்தியா - மை ஸ்கூல்' சார்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் தமிழக கபடி அணி வீரரும், காவலருமான கலைச்செல்வன், பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் சோமசுந்தரம் ஆகியோர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினர்.

