sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நல்லுார் கோவில் தேர்கள் 30ம் தேதி வெள்ளோட்டம்

/

நல்லுார் கோவில் தேர்கள் 30ம் தேதி வெள்ளோட்டம்

நல்லுார் கோவில் தேர்கள் 30ம் தேதி வெள்ளோட்டம்

நல்லுார் கோவில் தேர்கள் 30ம் தேதி வெள்ளோட்டம்


ADDED : ஏப் 28, 2025 05:59 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர் வெள்ளோட்டம், வரும் 30ம் தேதி நடக்கிறது.

திருப்பூர், நல்லுாரில் உள்ள, 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்காக சோமாஸ்கந்தர் தேர் பெரிதாகவும், விநாயகர் தேர் சிறிய அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய தேர் வெள்ளோட்டம், நாளை மறுநாள் (30ம் தேதி) நடக்கிறது.

வெள்ளோட்ட நிகழ்ச்சியை, திருவிழாவாக கொண்டாட, முருகேசன் தலைமையிலான அறங்காவலர் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வரும், 29ம் தேதி மாலை, விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்குகிறது. முதல்கால வேள்வி பூஜையும், 30ம் தேதி காலை 6:00 மணி முதல், 7:25 மணிக்குள், இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், 10:00 வரை, புதிய தேருக்கு கும்பாபிேஷகமும், மகாதீபாராதனையும் நடக்கிறது.

மாலை, 4:00 மணிக்கு, புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணி முதல், கயிலாய சிவ வாத்தியம், பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளையின் கும்மி நிகழ்ச்சி, ஆதன் பொன் செந்தில்குமார் குழுவினரின் பெருஞ்சலங்கையாட்டம், கம்பத்தாட்டம், அம்மன் கலைக்குழுவின் ஒயிலாட்டம், திருப்பூர் நண்பர்கள் குழு சார்பில், காவடியாட்டம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us