sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாட்டுநலப்பணி திட்ட முகாம் துவக்கம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

/

நாட்டுநலப்பணி திட்ட முகாம் துவக்கம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

நாட்டுநலப்பணி திட்ட முகாம் துவக்கம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

நாட்டுநலப்பணி திட்ட முகாம் துவக்கம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 28, 2025 11:21 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் துவங்கியுள்ளது.

மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை வளர்க்கும் வகையில், என்.எஸ்.எஸ்., முகாம் நடத்தப்படுகிறது.

அவ்வகையில், காலாண்டு தேர்வு விடுமுறை துவங்குவதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் துவங்கியுள்ளது.

உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் வி.ஜி. ராவ் நகரில் துவங்கியுள்ளது. பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சேஷநாராயணன் வரவேற்றார்.

தலைமையாசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முகாமின் ஒரு வார திட்ட பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பள்ளி உதவி திட்ட அலுவலர் ராமு நன்றி தெரிவித்தார்.

* புங்கமுத்துார் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட முகாம், தீபாலபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது.

முதல் நாளில் 'இயற்கையை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தொடர்ந்து மாணவர்கள் அருகில் உள்ள விநாயகர் கோவில் சுற்றுப்பகுதியில் துாய்மைப்பணிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து 'பிளாஸ்டிக் தவிர்ப்போம்' என்ற தலைப்பில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிறப்பு முகாமை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் காளிமுத்து பார்வையிட்டார்.

பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வேல் வரவேற்றார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அசோக்குமார் சிறப்பு முகாமில் பணிகள் குறித்து விளக்கமளித்தார். மாணவர்களுக்கு களப்பணி குறித்த தகவல்களை ஆசிரியர் மகேந்திரபாபு கூறினார்.

* பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட முகாம், பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது. முகாம் துவக்க விழாவில் பள்ளி தலைமையாசிரியர் விஜயா தலைமை வகித்தார்.

தொடர்ந்து போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. முகாமில் மாவட்ட நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். மதுரை தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் காந்தி மாணவர்களிடம் பேசினார்.

* நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த நாட்டுநலப்பணி திட்ட கூட்டங்களின் கருத்தரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலையில் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமை வகித்தார்.

எஸ்.கே.பி பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சேஷநாராயணன் வரவேற்றார். என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, தனியார் நிறுவனர் சபரிநாதன் பேசினார். கருத்தரங்குகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சுமதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., அலுவலர் முகமதுஹம்ஸா செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us