/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளருக்கு புத்தாடை - இனிப்பு
/
துாய்மை பணியாளருக்கு புத்தாடை - இனிப்பு
ADDED : அக் 16, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், வாட்டர்மேன்கள் உட்பட பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி நகராட்சி சார்பில் வேஷ்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
மொத்தம் 170 பேருக்கு நகராட்சி தலைவர் குமார் தலைமையில், கமிஷனர் பால்ராஜ் (பொறுப்பு), துணைத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.