தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வீரர்களை உருவாக்க புதிய வியூகம்

 வீரர்களை உருவாக்க புதிய வியூகம்

 வீரர்களை உருவாக்க புதிய வியூகம்


ADDED : ஆக 13, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: மாவட்ட அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், வாலிபால், கேரம், சதுரங்கம், சிலம்பம் போன்ற போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்கின்றனர். ஆனால் ஜிம்னாஸ்டிக், வாள்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, ஸ்குவாஷ் போன்ற போட்டிகளுக்கு வந்துவிட்டால், களம் திடீரென வெறிச்சோடியது போலத் தெரிகிறது.

இதற்குக் காரணம் திறமைக்குறைவு அல்ல; வாய்ப்புக் குறைவு. இந்தப் போட்டிகளுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் விலை உயர்ந்தவை. குறிப்பாக புறநகர் மற்றும் கிராமப்புற பள்ளிகளால் அவற்றை வாங்குவது எளிதல்ல. அதனால் பல பள்ளிகள் போட்டியில் பங்கேற்பதையே தவிர்த்து விடுகின்றன.

மாறாக, குறைந்த செலவில் பயிற்சி பெற முடியும் சிலம்பம் போன்ற போட்டிகளில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை மாற்ற பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் கூறுகையில், எல்லாப் பள்ளிகளும் எல்லா விளையாட்டிலும் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை.

தங்களுக்கு ஏற்ற மூன்று அல்லது நான்கு போட்டிகளைத் தேர்வு செய்து அதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ஆனால் ஜூடோ, குத்துச்சண்டை, வாள்சண்டை போன்ற போட்டிகளில் பங்கேற்பு குறைவாக இருப்பதால், பயிற்சியாளர்களை நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்பி, விதிமுறைகள் முதல் அடிப்படைப் பயிற்சி வரை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அடுத்த ஆண்டு அதிக மாணவர்கள் களமிறங்குவார்கள் என்று நம்புகிறோம், என்றார்.

விளையாட்டில் திறமை மட்டும் போதாது; வாய்ப்பும் வேண்டும். அந்த வாய்ப்பை மாணவர்களின் வாசலுக்கே கொண்டு செல்லும் முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us