sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு

/

மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு

மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு

மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு


ADDED : பிப் 13, 2025 07:24 AM

Google News

ADDED : பிப் 13, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, சேலம், உடுமலை, பொள்ளாச்சி, ஈரோடு, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றனர். வளாகத்தில் உள்ள ஏராளமான கடைகள், தங்கள் கடை முன்பு பொருட்களை நடைபாதையில் வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதன் காரணமாக, பயணிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏதாவது பிரச்னைகள் எழும் போது, மாநகராட்சி அதிகாரிகள் வெறும் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பதுண்டு. சில நாட்களில் மீண்டும், பழைய நிலை தொடர ஆரம்பித்து விடுகிறது.

பஸ்சிற்காக காத்திருக்க கூடிய மக்கள் கடைகள் முன்பு உள்ள நடைபாதையில் நின்றால், கடைக்காரர்கள் சத்தம் போடுவது தொடர்கிறது. இதுபோன்ற பல்வேறு சிரமங்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

''நடைபாதையில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்ற வேண்டும்'' என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us