/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை விவசாய கருத்தரங்கு; விவசாயிகள் பங்கேற்பு
/
இயற்கை விவசாய கருத்தரங்கு; விவசாயிகள் பங்கேற்பு
ADDED : செப் 02, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசியில் இயற்கை விவசாயம் குறித்து கருத்தரங்கம் நடந்தது. இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
அவிநாசி வேளாண்மை துறை, ஈஷா மண் காப்போம், காவேரி கூக்குரல் சார்பில், இயற்கை வேளாண்மை விவசாய நிகழ்ச்சி அவிநாசியில் உள்ள கஸ்துாரி மஹாலில் நடந்தது. இதில், அவிநாசி வேளாண்மை உதவி அலுவலர்கள் வினோத்குமார், கிருஷ்ணவேணி, ஈஷா மண் காப்போம் பயிற்சியாளர் கதிர்வேல், காவேரி கூக்குரல் இளங்கோ மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில், இயற்கை வேளாண்மை குறித்து அதன் நன்மைகள், எந்த காலகட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கினர். நிகழ்ச்சியின் இறுதியில், மரக்கன்று நடப்பட்டது.