sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வரும் 18ல் 'நம்ம திருப்பூர் மராத்தான்' 

/

வரும் 18ல் 'நம்ம திருப்பூர் மராத்தான்' 

வரும் 18ல் 'நம்ம திருப்பூர் மராத்தான்' 

வரும் 18ல் 'நம்ம திருப்பூர் மராத்தான்' 


ADDED : பிப் 14, 2024 11:57 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : உடற் பயிற்சியின் முக்கியத்துவம்; உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும்ம் 'நம்ம திருப்பூர் மராத்தான்' அனைவரும் பங்கேற்க, யங் இந்தியன்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.

யங் இந்தியன்ஸ் மற்றும் சி.ஐ.ஐ., சார்பில், 'நம்ம திருப்பூர் மராத்தான்' நிகழ்ச்சி, வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. 'யங் இந்தியன்ஸ்' அமைப்புடன், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், போலீஸ், ஐவின் டிராக் ஆகியவை கரம்கோர்த்துள்ளன. திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் அருகே உள்ள ஐவின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் ல் இருந்து, மாரத்தான் துவங்குகிறது. மூன்று பிரிவுகளாக ஓட்டம் நடைபெறுகிறது.

யங் இந்தியன்ஸ் திருப்பூர் தலைவர் நிரஞ்சன், துணை தலைவர் மோகன்குமார் கூறியதாவது:

நம் நாட்டில், 64 சதவீதம் பேர், எவ்வித உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை. உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியமின்மையால், மக்கள், பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளாகி, தவறான முடிவு எடுக்கின்றனர். நாட்டின் பின்னலாடை உற்பத்தி தலைநகரான திருப்பூரில், பலர் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுளளனர்.

இச்சூழலில், உடல் ஆரோக்கியம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மராத்தான் மிகவும் அவசியமாகிறது. யங் இந்தியன்ஸ் சார்பில், திருப்பூரில் கடந்த 2017 ல் முதல் மாரத்தான்; 2018ல் இரண்டாவது மாரத்தான் நடத்தப்பட்டது.

'ஓடு... ஓடு உனக்காக ஓடு; உடல் நலத்துக்காக ஓடு' என்கிற தலைப்பில், தற்போது, மூன்றாவது மராத்தான், வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. சிறுவர், பெரியவர், பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். மூன்று, ஐந்து, பத்து கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக ஓட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. காலை, 6:00 மணி முதல் மராத்தான் துவங்கும்.

கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், எஸ்.பி., அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். போலீஸ் கமிஷனர் தலைமையில், மாநகர போலீசார், 70 பேர் மாரத்தானில் பங்கேற்கின்றனர். முதன்முறையாக, மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக ஓட்டம் நடைபெற உள்ளது.

ஏரோபிக்ஸ், ஜூம்பா நடனத்துடன் துவக்கம்

முதன்மை பொறுப்பாளர் நந்தகுமார் கூறியதாவது:மராத்தானில், 10 கி.மீ., ஓட்டம், ஐவின் டிராக்கில் துவங்கி காங்கயம் மெயின் ரோட்டில், பிரைட் பப்ளிக் பள்ளி வரை சென்று, மீண்டும் ஐவின் டிராக்கில் முடிவடையும். 5 கி.மீ., ஓட்டம், ஐவின் டிராக்கிங் துவங்கி, காங்கயம் மெயின் ரோட்டில், பள்ளக்காடு தோட்டம் வரை சென்று, ஐவின் டிராக் திரும்பும். 3 கி.மீ., ஓட்டம், ஐவின் டிராக்கில் துவங்கி, ராக்கியாபாளையம் சிக்னல் வரை சென்று திரும்பும். துவக்க நிகழ்வாக, பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தும்வகையில், ஏரோபிக்ஸ், ஜூம்பா நடனம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன என்றார்.மாரத்தானில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம்.97861 25453, 78260 03195, 90873 45905, 90920 37506 மற்றும் https://www.sporfy.com/l/dnaV என்கிற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.








      Dinamalar
      Follow us