/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருத்து சொல்லப்போகும் கட்சிகள்; காட்சிகள் மாறும் காலம் வருமா? தேர்தல் சிறக்கட்டும்!
/
கருத்து சொல்லப்போகும் கட்சிகள்; காட்சிகள் மாறும் காலம் வருமா? தேர்தல் சிறக்கட்டும்!
கருத்து சொல்லப்போகும் கட்சிகள்; காட்சிகள் மாறும் காலம் வருமா? தேர்தல் சிறக்கட்டும்!
கருத்து சொல்லப்போகும் கட்சிகள்; காட்சிகள் மாறும் காலம் வருமா? தேர்தல் சிறக்கட்டும்!
ADDED : மார் 17, 2025 01:35 AM

திருப்பூர்; தேர்தலை திறம்பட நடத்துவது தொடர்பான செயல்திட்டங்கள் தொடர்பாக கருத்துகளைப் பெறுவதற்காக, திருப்பூரில் கலெக்டர் தலைமையில், வரும் 20ம் தேதி அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
தேர்தல் கமிஷன், ஒவ்வொரு தேர்தலையும் திறம்பட நடத்துவதற்காக, சிறந்த செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்திவருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தி, முறைகேடுகளை தடுப்பது, நுாறு சதவீத ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன.
தற்போது, மாநில, மாவட்ட அளவில், அனைத்து அரசியல் கட்சியினருடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி, தேர்தல் தொடர்பான கருத்துக்களை பெற தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அவ்விவரங்களை வரும் ஏப்., 30ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், வரும் 20ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்பட மாவட்ட தேர்தல் பிரிவு சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம், குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.