ADDED : நவ 05, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்-11' திட்டத்தில், பெருமாநல்லுார் அருகே, 281 மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டது
'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், கடந்த, 2015ம் ஆண்டு துவங்கி, இதுவரை, 24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
வரும் டிச., மாதத்துக்குள், மேலும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணி வேகமடைந்துள்ளது. இந்நிலையில், பெருமா நல்லுார் அடுத்துள்ள சடையம்பதி கிராமத்தில், ராஜூ என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 281 மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

