/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்டுப்பாளையத்தில் 5,700 சவுக்கு மரக்கன்று நடவு
/
காட்டுப்பாளையத்தில் 5,700 சவுக்கு மரக்கன்று நடவு
ADDED : செப் 27, 2025 12:05 AM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், கானுார் அருகே, 5,850 மரக்கன்றுகள் நடப்பட்டது.
வெற்றி அறக்கட்டளை சார்பில், மரம் வளர்க்கும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப் படுகிறது. நேற்று காலை நிலவரப்படி, 1.93 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில், பயனுள்ள மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
அவிநாசி தாலுகா சொக்கனுார், காட்டுப்பாளையம் பகுதியில், குருசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. நில உரிமையாளர்கள் குருசாமி, கவுரி, மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர். மொத்தம், 5,700 சவுக்கு மரக்கன்றுகள்; மலை வேம்பு -150 என, 5,850 மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், இலவசமாக மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.