sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்தலுக்காக போலீசார் இடமாற்றம் மாநகரில் மந்தம்; மாவட்டத்தில் பரபரப்பு

/

தேர்தலுக்காக போலீசார் இடமாற்றம் மாநகரில் மந்தம்; மாவட்டத்தில் பரபரப்பு

தேர்தலுக்காக போலீசார் இடமாற்றம் மாநகரில் மந்தம்; மாவட்டத்தில் பரபரப்பு

தேர்தலுக்காக போலீசார் இடமாற்றம் மாநகரில் மந்தம்; மாவட்டத்தில் பரபரப்பு


ADDED : பிப் 14, 2024 11:55 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : லோக்சபா தேர்தலையொட்டி போலீசார் இடமாற்றம் விஷயத்தில் மாவட்டத்தில் பெரும்பாலான போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநகரில் மட்டும் இதற்கான பணி மந்த கதியில் நடக்கிறது.

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வருவாய்த்துறை, போலீசார் உள்ளிட்ட அனைத்துறைகளிலும் இடமாற்றம் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்ட புதிய எஸ்.பி., பொறுப்பேற்றவுடன், 3 ஆண்டுகள் கடந்து பணியாற்றுபவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

அடுத்தடுத்து சில நாள் இடைவெளியில், போலீசார், தனிப்பிரிவு போலீசார் என, 181 பேரை எஸ்.பி., அபிஷேக் குப்தா இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தவிர இன்ஸ்பெக்டர்களும் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றத்தில் சென்றனர்.

மாநகர போலீசாரில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் என, 28 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். போலீசார் முதல் போலீஸ் ஏட்டு வரையிலான இடமாற்றம் இன்னும் செய்யப்படவில்லை. மூன்றாண்டுகளை கடந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று, மாநகர போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

சுட்டிகாட்டிய 'தினமலர்'


திருப்பூர் மாவட்டத்தில், தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்படாமல் ஆண்டுக்கணக்காக ஒரே ஸ்டேஷனில் இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக பட்டியல் தயார் செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், பணி ரீதியாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத சிலரை தவிர்த்து பெரும்பாலான எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவிநாசியில் பணியாற்றிய துரைராஜ், எஸ்.பி., தனிப்பிரிவு அலுவலகத்துக்கும், தாராபுரம் (கம்யூனல் பிரிவு) ராஜ்குமார் மூலனுாருக்கும், அமராவதி நகர் நாகராஜன், குடிமங்கலத்துக்கும், சேவூர் செல்வராஜ் குண்டத்துக்கும், தளி ஜெய்கணேஷ், உடுமலைக்கும், அமராவதி நகர் நாகராஜன், குடிமங்கலத்துக்கும், காமநாயக்கன்பாளையம் சரவணகுமார், சேவூருக்கும், குமரலிங்கம் லிங்கேஸ்வரன், உடுமலை.

குடிமங்கலம் கருப்புசாமி கணியூருக்கும், அவிநாசிபாளையம் சேதுமாதவன், காமநாயக்கன்பாளையத்துக்கும், காங்கயம் அருள்முருகன் அவிநாசிக்கும், உடுமலை நாகராஜூ, மடத்துக்குளத்துக்கும், பெருமாநல்லுாருக்கு புகழேந்தி, அமராவதிநகருக்கு சரவணகுமார், குடிமங்கலம் செண்பகராஜேஷ் தளி ஸ்டேஷனில், எஸ்.பி., தனிப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே, எஸ்.பி., தனிப்பிரிவில் பணியாற்றிய பெருமாநல்லுார் பாலசந்தர் குன்னத்துார் ஸ்டேஷனக்கும், குடிமங்கலம் மகேஸ்வரன், உடுமலை போக்குவரத்துக்கும், அலங்கியம் பொன்னுசாமி, தாராபுரம் போக்குவரத்து. மடத்துக்குளம் நாகராஜ், உடுமலைக்கும், பல்லடம் வைசாகன், அவிநாசிக்கும், உடுமலை சதீஷ்குமார், மடத்துக்குளத்துக்கும், குண்டடம் சதீஷ்குமார் அவிநாசிபாளையத்துக்கும், மூலனுார் சத்தியசீலன், தாராபுரம் போக்குவரத்துக்கும், ஊத்துக்குளி ரமேஷ், பெருமாநல்லுார் போக்குவரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.








      Dinamalar
      Follow us