sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொங்கல் சிறப்பு பஸ் நாளை முதல் இயக்கம்

/

பொங்கல் சிறப்பு பஸ் நாளை முதல் இயக்கம்

பொங்கல் சிறப்பு பஸ் நாளை முதல் இயக்கம்

பொங்கல் சிறப்பு பஸ் நாளை முதல் இயக்கம்


ADDED : ஜன 11, 2024 07:06 AM

Google News

ADDED : ஜன 11, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : வரும், 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூர் மண்டலத்தில் சிறப்பு பஸ் இயக்கம் நாளை துவங்குகிறது; 14ம் தேதி நள்ளிரவு வரை பஸ் இயக்கப்படுகிறது.

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம், திருவண்ணாமலைக்கு, 130, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு, 200, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, கம்பம், சிவகங்கை, சிவகாசி உள்ளிட்ட பகுதிக்கு, 300 நடைகள் என மொத்தம், மூன்று பஸ் ஸ்டாண்ட்டுக்கும் சேர்த்து, 630 கூடுதல் நடை பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை, திருச்செந்துார், நாகர்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட தொலைதுாரங்களுக்கு பயணிக்க, முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய, மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது. காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை இம்மையத்தில் முன்பதிவு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னைக்கு இன்றே...


மூன்று பஸ் ஸ்டாண்டிலும் சிறப்பு பஸ் பணிகளை மேற்பார்வை செய்ய, 30 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பூர் வரும் பயணிகளை அழைத்து வர ஏதுவாக இன்று காலை திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு 7 பஸ் இயக்கப்படுகிறது. நாளை இந்த பஸ்கள் அங்கிருந்து திருப்பூருக்கு பயணிகளை அழைத்து வருகின்றன.






      Dinamalar
      Follow us