sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்பு

/

ஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்பு

ஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்பு

ஆட்டோ டிரைவர்களுடன் அமைதிப்பேச்சு ஒத்திவைப்பு


ADDED : பிப் 24, 2024 01:26 AM

Google News

ADDED : பிப் 24, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடத்தில், ஆட்டோ டிரைவர்களுடனான அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு எட்டாத நிலையில், அடுத்த மாதம், 5ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

பல்லடம் பஸ் ஸ்டாண்டில், 45 ஆட்டோக்கள் உள்ளன. ஆட்டோ டிரைவர்கள் மத்தியில், ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் தொடர்பாக, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, ஆட்டோ டிரைவர்களுக்கு, பல்லடம் தாசில்தார் அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்று தாசில்தார் ஜீவா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு, ஆட்டோ டிரைவர்கள் ஆஜராயினர். அதில், ஆட்களை நியமித்து 24 மணி நேரமும் ஆட்டோக்களை இயக்குவதால் தங்களது வருவாய் பாதிக்கப்படுவதாக, சிலர் குற்றம்சாட்டினர். சூழ்நிலை காரணமாக ஆட்களை வைத்து ஆட்டோ ஓட்டி வருவதாக மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர்.

சிலர் தங்களுக்கும் ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு, மூன்று தரப்பாக மனுக்கள் வழங்கப்பட்டதால், முடிவு எட்டப்படாமல், வரும், மார்ச் 5ம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக, தாசில்தார் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us