/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகைக்கடன் வழங்க அழுத்தம்: கூட்டுறவு பணியாளர் எதிர்ப்பு
/
நகைக்கடன் வழங்க அழுத்தம்: கூட்டுறவு பணியாளர் எதிர்ப்பு
நகைக்கடன் வழங்க அழுத்தம்: கூட்டுறவு பணியாளர் எதிர்ப்பு
நகைக்கடன் வழங்க அழுத்தம்: கூட்டுறவு பணியாளர் எதிர்ப்பு
ADDED : மார் 02, 2026 06:08 AM

திருப்பூர்: 'நகைக்கடன் வழங்க அழுத்தம் தரக்கூடாது' என்று தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர் யூனியன் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் நான்காவது மாநில பேரவைக் கூட்டம், திருப்பூரில் நடந்தது. முன்னதாக பேரவை கொடியேற்றப்பட்டது. மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். வீட்டு வசதி சங்கங்களில் நகைக்கடன் வழங்க அழுத்தம் தரக் கூடாது. தகுதியான சங்கங்கள் மட்டுமே கடன் வழங்கலாம். நலிவடைந்த சங்கங்களையும் நகைக்கடன் வழங்க வற்புறுத்தக்கூடாது.
நகைக்கடனுக்கான வட்டி குறைக்க வேண்டும். பிரதம சங்க பணியாளர்கள் இறந்தால் வாரிசு வேலை வழங்க வேண்டும். பிரதம சங்கங்களில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால், 1977 முதல் தணிக்கை குறை நிவர்த்தி என்பதை கைவி ட வேண்டும். லாபத்தில் செயல்படும் சங்க பணியாளர்கள் ஊதிய தொகை, வட்டி வருவாயில் விளிம்பு தொகை 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கைவிட வேண்டும். மருத்துவ காப்பீடு, ஊதிய உயர்வு ஒப்பந்தம், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

