/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 16, 2025 11:10 PM

திருப்பூர்; சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தி பேசிய, அமைச்சர் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டன கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக பதவியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கோட்ட அமைப்பு செயலாளர் சேனாதிபதி, மாவட்ட பொருளார் கோவிந்தராஜ், நகரத்தலைவர் கிருஷ்ணன், இந்து மக்கள் எழுச்சி பேரவை தமிழக நிறுவனர் ராதாசுதிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.