/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
/
ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2025 10:39 PM
உடுமலை; அமராவதி ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் பொருத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இதனால், இப்பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து காணப்படுகிறது. ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இங்கு மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே, இப்பாலத்தில், இவற்றை பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.