sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓய்வு பெற்ற அரசு பஸ் ஊழியர் மொட்டை அடித்து போராட்டம் 

/

ஓய்வு பெற்ற அரசு பஸ் ஊழியர் மொட்டை அடித்து போராட்டம் 

ஓய்வு பெற்ற அரசு பஸ் ஊழியர் மொட்டை அடித்து போராட்டம் 

ஓய்வு பெற்ற அரசு பஸ் ஊழியர் மொட்டை அடித்து போராட்டம் 


ADDED : செப் 27, 2025 12:12 AM

Google News

ADDED : செப் 27, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அரசு பஸ் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தப்படி நிலுவை உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் மொட்டையடித்து போராட்டம் நடத்தினர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 15வது ஊதிய ஒப்பந்தப்படியான சம்பள நிலுவை வழங்க வேண்டும்; 2003ம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும்; நிலுவையில் உள்ள ஓய்வுக்காலப் பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில், திருப்பூர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தினர்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 40 நாளாக நடைபெற்றுவரும் காத்திருப்பு போராட்டத்தில், அரை நிர்வாணப் போராட்டம், பாடை கட்டிவைத்து போராட்டம் ஆகியனவும் நடைபெற்றது. 40வது நாளான நேற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற ஊழியர்களில், 12 பேர் மொட்டை அடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us