/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 01, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி, நாட்டு நலப்பணி திட்டம், உயிர் அமைப்பு சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் வசந்தி, கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். கல்லுாரி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர், சந்திப்பு, ஆண்டிபாளையம் பிரிவு வரை சென்று மீண்டும் கல்லுாரிக்கு திரும்பியது; மாணவியர், 220 பேர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு வாசக பாதகைகளை ஏந்தியபடி மாணவியர் ஊர்வலமாக சென்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கோமதி, நிர்மலா தேவி, கோமளவல்லி, ரூபா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.