sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலையோரம் கடைகள்... ஆபத்துக்கு அச்சாரம்!

/

சாலையோரம் கடைகள்... ஆபத்துக்கு அச்சாரம்!

சாலையோரம் கடைகள்... ஆபத்துக்கு அச்சாரம்!

சாலையோரம் கடைகள்... ஆபத்துக்கு அச்சாரம்!


ADDED : ஜன 04, 2025 12:18 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரைகுறை பணி

திருப்பூர், எஸ்.ஆர்., நகர் தெற்கு, விவேகானந்தர் ஏழாவது வீதியில் பைப் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. அப்படியே விடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- ராஜவேல், எஸ்.ஆர்., நகர். (படம் உண்டு)

முட்புதரை அகற்றலாமே!

திருமுருகன்பூண்டி மேம்பாலத்தின் கீழ் முட்புதர் நிறைந்து காணப்படுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. முட்புதர்களை அகற்றி, ஓடையை சுத்தம் செய்ய வேண்டும்

- ஆறுமுகம், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)

ஆக்கிரமிப்பை அகற்றுங்க...

அவிநாசி ரோடு - பி.என்., ரோடு, இணைப்பு சாலையாக உள்ள சரவணா வீதியில், புதிய கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தாமல், தடுப்பு கற்கள் வைத்து அடைத்து வைத்துள்ளனர்.

- முத்துக்குமார், லட்சுமிநகர். (படம் உண்டு)

அவிநாசி - புதிய திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ், தெருவோர கடைகள் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படுகிறது. வளைவில் திரும்பும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

- சந்திரசேகர், புதிய திருப்பூர். (படம் உண்டு)

சறுக்கும் சாலை

திருப்பூர், கூலிபாளையம் - வாவிபாளையம் ரிங்ரோடு சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. தார் பெயர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.

- விஜி, கூட்டுறவுநகர். (படம் உண்டு)

காத்திருக்கும் ஆபத்து

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, மாரியம்மன் கோவில் வீதி, ரயில் பாலம் அருகே சாலை சேதமாகி, குழியாகி விட்டது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.

-- சித்தரஞ்சன், பாளையக்காடு. (படம் உண்டு)

திருப்பூர், மாநகராட்சி ஐந்தாவது வார்டு, அங்கேரிபாளையம் கிழக்கு வீதியில், சாக்கடை கால்வாய் கட்ட குழி தோண்டப்பட்டது. பணி முடிந்த பின் சாக்கடை ஒட்டிய குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளது.

- உமா, அங்கேரிபாளையம். (படம் உண்டு)

ரியாக் ஷன்

குழியை மூடிட்டாங்க...

திருப்பூர், 50 வது வார்டு, கரட்டாங்காடு பகுதியில் கேபிள் லைன் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. குழியை மண் கொட்டி மூடியுள்ளனர்.

- ராஜேந்திரன், கரட்டாங்காடு. (படம் உண்டு)

தெருவிளக்கு 'பளிச்'

திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் - ராயபுரம் தீபம் பாலம் சந்திப்பில், தெருவிளக்கு எரியாமல் இருப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு பளிச்சிடுகிறது.- ராஜா, பாரப்பாளையம். (படம் உண்டு)

உடைப்பு சீரமைப்பு

திருமுருகன்பூண்டி ரிங்ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது.

- விஜிலட்சுமி, திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)

குப்பை அள்ளிட்டாங்க...

பெத்திசெட்டிபுரம் முதல் வீதி, நொய்யல் செல்லும் வழியில் இறைச்சிக்கழிவு, குப்பை கொட்டப்படுவதாக தினமலர் நாளிதழில் செய்ததி வெளியானது. மாநகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பை அள்ளப்பட்டு விட்டது.

- பாலு, பெத்திசெட்டிபுரம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us