ADDED : ஏப் 29, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:
பெருமாநல்லுார் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை நடந்தது. சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் ரத்னாம்பாள், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், கோவில்களின் ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
மொத்தம், 11 லட்சத்து, 74 ஆயிரத்து, 387 ரூபாய், 21 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

