sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாரண இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

/

சாரண இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

சாரண இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

சாரண இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்


ADDED : செப் 15, 2025 09:36 PM

Google News

ADDED : செப் 15, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் மாவட்ட அளவில், சாரண இயக்க பொதுக்குழு கூட்டம் உடுமலையில் நடந்தது.

உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட சாரண பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து தலைமை வகித்தார். மூத்தோர் வள ஆணையர் ராதாபாய் ஆண்டறிக்கை வாசித்தார்.

செயலாளர் காந்தி வரவு செலவு கணக்கு குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன், எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம், கடத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் போதராஜ் முன்னிலை வகித்தனர்.

மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாரண இயக்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயா சாரணிய இயக்க வரலாறு குறித்து பேசினார். மாவட்ட சாரண அமைப்பு ஆணையர் திலகராஜ் மாநில ஆளுநர் விருது குறித்து தகவல்களை வழங்கினார்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கண்ணபிரானுக்கு சாரண மரியாதை வழங்கப்பட்டது. மாவட்ட உதவி செயலாளர் பாலாமணி சாரண இயக்க வளர்ச்சிக்கான தகவல்கள் குறித்து பேசினார்.

சாரண வளர்ச்சி ஆணையர் ஸ்வரன் நன்றி தெரிவித்தார். சாரண பயிற்சி ஆணையர் காளீஸ்வரராஜ் கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us