ADDED : பிப் 21, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர், 38 வயது பெண் தனியாக வசித்து வருகிறார்.
வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு இரவு துாங்கி கொண்டிருந்தார். வீட்டுக்குள் நுழைந்த ஒருவர், பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன், ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர். வீரபாண்டி, வள்ளலார் நகரை சேர்ந்த ராஜா, 30 என்பது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

