sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பவித்ரோத்ஸவ விழாவில் இன்று சிறப்பு திருமஞ்சனம்

/

பவித்ரோத்ஸவ விழாவில் இன்று சிறப்பு திருமஞ்சனம்

பவித்ரோத்ஸவ விழாவில் இன்று சிறப்பு திருமஞ்சனம்

பவித்ரோத்ஸவ விழாவில் இன்று சிறப்பு திருமஞ்சனம்


ADDED : செப் 04, 2025 10:55 PM

Google News

ADDED : செப் 04, 2025 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ ரேணுகாதேவி கோவிலில், 'பவித்ரோத்ஸவ' விழாவில், நிறைவு நாளான இன்று நம்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி, வைணவ ஆலயங்களில் அவசியமாக செய்ய வேண்டிய நித்திய பூஜைகள்,நைவேத்தியங்கள், வழிபாட்டு முறைகள் உட்பட அனைத்து கைங்கர்யங்கள், தவறுகளால் ஏற்படும் தோஷங்களிலிருந்து நிவர்த்தி கிடைக்க 'பவித்ரோத்ஸவம்' என்ற வைதீகமான உற்சவம் நடத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ ரேணுகாதேவி கோவிலில், கடந்த 2ம் தேதி மாலை, 4:00 மணிக்கு 'பவித்ரோத்ஸவ' யாகசாலை பூஜைகள் துவங்கின.

நேற்று காலை, 8:00 மணிக்கு சதுஸ்தான அர்ச்சனம், ேஹாமம், சாற்றுமுறை கோஷ்டி நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு ேஹாமம், சதுஸ்தான அர்ச்சனம் நடக்கிறது. மாலை, 7:30 மணிக்கு பவித்ரம் மாலை கலைந்து திருமஞ்சனம் நடக்கிறது.

இரவு, 8:00 மணிக்கு மகா நிவேதனம், கோஷ்டி, உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் பவித்ரோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us