/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எறிபந்து போட்டி மாணவர் உற்சாகம்
/
எறிபந்து போட்டி மாணவர் உற்சாகம்
ADDED : ஆக 23, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரில் உள்ள கிட்ஸ் கிளப் சர்வதேசப் பள்ளியில் சர்வதேசப் பள்ளி களுக்கு இடையேயான எறி பந்து போட்டி துவங்கியது. திருப்பூர், ஈரோடு, பழனி, கோவை, காங்கயம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 வயதினர், 14 வயதினர், 19 வயதினர் பிரிவில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஏ.என்.டி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லதாசுந்தரம் எறி பந்து போட்டியைத் துவக்கிவைத்தார். பள்ளித் தலைவர் மோகன்கார்த்திக், தாளாளர் வினோதினி, பள்ளி முதல்வர்நிவேதிகா, இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர்.