/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வு இடங்கள் மாணவர் அறியலாம்
/
'நீட்' தேர்வு இடங்கள் மாணவர் அறியலாம்
ADDED : ஏப் 25, 2025 11:33 PM
உடுமலை: இந்தாண்டு நீட் தேர்வு, மே, 4ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர் உட்பட, 1,200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான உத்தேச தேர்வு மையம் குறித்த அறிவிப்பு, வெளியிடப்பட்டது. https://cnr.nic.in என்ற இணையதளத்தில் இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், ''நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது உத்தேசமாக இரண்டு அல்லது மூன்று மாவட்ட தேர்வு மையங்களை விண்ணப்பதாரர் தேர்வு செய்திருப்பர். தற்போது வெளியாகியுள்ள பட்டியலில், மாணவர்கள் எந்த மாவட்டத்தில் தேர்வு எழுத போகிறீர்கள் என்ற விவரம் வெளியாகி இருக்கும். தேர்வு மையம் குறித்த விபரம் இம்மாத இறுதிக்குள் வந்து விடும்,'' என்றார்.

