/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யோகா போட்டியில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்
/
யோகா போட்டியில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்
ADDED : செப் 02, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் சேவா சமிதி, திருப்பூர் நேஷனல் யோகா அசோசியேஷன் சார்பில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டி, திருப்பூர் துவாரகா சிறப்பு பள்ளியில் நடந்தது.
இதில், 29 மாணவர்கள் பங்கேற்று, அதில், 21 பேர் முதலிடம் பெற்றனர்; 8 மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர். மேலும், யோகா சிறப்பு பிரிவில், 7 மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.
இவர்கள், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கி வரும் துவாரகா சிறப்பு பள்ளியில், பயிற்றுனர் ஜாவித் மற்றும் ஜெகப்பிரியா ஆகியோரிடம் யோகா பயின்று வருகின்றனர்.