/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரையின்றி அவதி
/
முக்கிய பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரையின்றி அவதி
ADDED : மே 05, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில், நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில், யூனியன் பஸ் நிறுத்தம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் இங்கு நிழற்கூரை இல்லாததால், பொதுமக்கள், பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, யூனியன் பஸ் ஸ்டாப்பில், பயணியர் நிழற்கூரை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.