sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில் இடத்தை மீட்க அளவீடு; தமிழக அரசுக்கு மக்கள் மனு

/

கோவில் இடத்தை மீட்க அளவீடு; தமிழக அரசுக்கு மக்கள் மனு

கோவில் இடத்தை மீட்க அளவீடு; தமிழக அரசுக்கு மக்கள் மனு

கோவில் இடத்தை மீட்க அளவீடு; தமிழக அரசுக்கு மக்கள் மனு


ADDED : செப் 19, 2025 08:09 PM

Google News

ADDED : செப் 19, 2025 08:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; 'கண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, கம்பி வேலி அமைத்து தர வேண்டும்,' என தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியின் வரலாற்றுச்சின்னமாக கருதப்படும் இக்கோவில், நீண்ட காலத்துக்குப்பிறகு தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

போதிய பராமரிப்பு இல்லாமல் கோவில் இருந்த போது, கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டது. தற்போது புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், கும்பாபிேஷகத்துக்கு முன்னர் கோவில் இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

மனுவில், ' பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய மூவர் கண்டியம்மன் கோவிலில், முன்பு தேரோட்டம் நடக்கும் அளவுக்கு கோவிலுக்கு சொந்தமான இடம் இருந்துள்ளது. காலப்போக்கில் கோவில் இடம் எந்தளவு உள்ளது என, தெரியாத நிலை ஏற்பட்டது. ஹிந்து அறநிலையத்துறையினர் கோவிலுக்குரிய இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கம்பி வேலி அமைக்க அரசு உத்தரவிட வேண்டும்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us