sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளிகளில் ஆசிரியர் தின விழா மாணவர்கள் கலைநிகழ்ச்சி

/

பள்ளிகளில் ஆசிரியர் தின விழா மாணவர்கள் கலைநிகழ்ச்சி

பள்ளிகளில் ஆசிரியர் தின விழா மாணவர்கள் கலைநிகழ்ச்சி

பள்ளிகளில் ஆசிரியர் தின விழா மாணவர்கள் கலைநிகழ்ச்சி


ADDED : செப் 05, 2025 09:37 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் ஓணம், ஆசிரியர் தினம் மற்றும் மிலாடி நபி கொண்டாடப்பட்டது.

குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம், மிலாடி நபி மற்றும் ஆசிரியர் தின சிறப்பு தினங்கள் கொண்டாடப்பட்டன. மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஆசிரியர்கள் கேரள நடனம் ஆடினர். தொடர்ந்து முகமது நபியின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் ஜூலியா, முதல்வர் மஞ்சுளாதேவி தலைமை வகித்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

* உடுமலை ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் மற்றும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மாலா விழாவை துவக்கி வைத்தார். ஓணம் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். மழலையர் பிரிவு மாணவர்கள் கேரள பாரம்பரிய உடையணிந்து நாடகம் மற்றும் நடனமாடினர். ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் மாணவர்கள் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

விழாவில் உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனத்தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us