/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கனவை சொல்லுங்க' திட்டம் மாநகராட்சி ஆலோசனை
/
'கனவை சொல்லுங்க' திட்டம் மாநகராட்சி ஆலோசனை
ADDED : பிப் 21, 2026 07:49 AM
திருப்பூர்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களிடம் கருத்து, வேண்டுகோள், ஆலோசனைகளைப் பெறும் வகையில் 'உங்க கனவை சொல்லுங்க' திட்டத்தை முதல்வர் துவக்கிவைத்தார். வீடு வீடாகச் சென்று ஒரு அச்சிட்ட படிவத்தை வழங்கி, அதை பூர்த்தி செய்து பெற்று சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த கருத்துகள் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகள், புதிய அறிவிப்புகள் வெளியிடுவது போன்றவை மேற்கொள்ள இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், மகளிர் சுய உதவிக்குழுவினர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 300 பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் திட்ட நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று, டவுன்ஹால் அரங்கில் நடந்தது. கமிஷனர் அமித் தலைமை வகித்தார். துணைகமிஷனர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால், இப்பணியை விரைந்து முடித்து தங்கள் பகுதியில் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டஅறிவுறுத்தப்பட்டது.

