sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு இடம் மாறுகிறது அன்னதான கூடம்

/

ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு இடம் மாறுகிறது அன்னதான கூடம்

ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு இடம் மாறுகிறது அன்னதான கூடம்

ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு இடம் மாறுகிறது அன்னதான கூடம்


ADDED : ஏப் 24, 2025 06:38 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்கள் சார்பில், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில், தினமும் 50 பக்தர்களுக்கு அன்னதானம், வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்களிப்புடனும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டிலும், குறிப்பிட்ட ஒரு நாளில் அன்னதானம் வழங்க, 35 ஆயிரம் ரூபாய் 'டெபாசிட்' செலுத்தும் வசதியும் உள்ளது.

தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. அறங்காவலர் குழுவினர், அதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளனர். கடும் இட நெருக்கடியாக இருப்பதால், அன்னதான கூடத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

''வீரராகவப்பெருமாள் கோவிலின், வடமேற்கு பகுதியில் உள்ள காலியிடத்தில், சமையல் அறையுடன் இணைந்த அன்னதான கூடம், பெருமாள் கோவில் வளாகத்தில் கோவில் அலுவலகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். டெண்டர் பணிகள் முடிந்த பிறகு, அதற்கான பணிகள் துவங்க உள்ளது.

பக்தர்கள் வசதிக்காக, ஈஸ்வரன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில், கழிப்பறை வசதி செய்யப்படும். பசுக்களுக்கு, வசதியான கோசாலை அமைக்கும் பணியும் விரைவில் துவங்கும்.

தேர் ஸ்தபதிகளை கொண்டு, தேர் பராமரிப்பு பணியும் செய்துள்ளோம்'' என்கின்றனர் கோவில் அறங்காவலர்கள்.






      Dinamalar
      Follow us